Saturday, January 7, 2012

கொழும்பு - கொலன்னாவைக்கிடையில் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் கசிவு


கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள்கொண்டு செல்லும் நிலக்கீழ் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளதால், களனி பாலத்திற்கருகே எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளே நேற்று பிற்பகல் பெருமளவில் கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவைக்கு எரிபொருள்கொண்டு செல்லப்படும் குழாய்கள் பல தசாப்தகாலம் பழைமை வாய்ந்தவையாக காணப்படுவதாகவும் இவற்றுக்குமேல் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அக்குழாய்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் பெற்றோலியத் துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து இரு நாட்களாக குழாய் மூலம் கொலன்னாவை களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தற்போது அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment