Saturday, January 7, 2012

லொறி ஒன்றை கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாய்களுக்கு சிறைத்தண்டனை


கண்டியில் லொறி ஒன்றை கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாய்களுக்கு மேல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கண்டி � மஹியங்கனை வீதியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயுத முனையில் லொறியில் பயணித்தவர்களை காயப்படுத்தி, லொறியில் இருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஆறு இராணுவச் சிப்பாய்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட படைச் சிப்பாய்களுக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.
முதலாம் சந்தேக நபருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் இரண்டாண்டுகால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு 575,000 ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறும் குறித்த இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment