Wednesday, January 25, 2012

வடக்கில் நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்- ஜே.வி.பி


வடக்கில் உள்ள நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் நீர்வடிகால்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.
தம்மை நேற்று சந்தித்த யு.எஸ்.எய்ட் நிறுவன அதிகாரிகளிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யு.எஸ்.எய்ட் அதிகாரிகள் இதன்போது கலந்துரையாடினர்.
இந்தநிலையில் வடபகுதியில் நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகள் என்பவற்றில் அரசியல்வாதிகளினால் ஊழல்களும், முறைகேடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இடம்தராத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வடக்கு மக்களுக்கு உரிய வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment