Friday, January 20, 2012

அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டோர் குறித்து விசாரணை


அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணி அபகரிப்பு, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எந்தவொரு சந்தேகநபரும் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment