கைது செய்யப்பட்ட சாரதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேசசாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒற்றைக் கையுடன் வாகனம் செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சாரதியும் வாகன அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை தவிர்த்து கொள்வதற்கும் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment