Monday, January 2, 2012

கடந்த ஆண்டு 2500பேர் விபத்துக்களில் சாவு

news






2011ம் ஆண்டு மாத்திரம் பதிவாகியுள்ள 37000 வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
விபத்துக்களுக்கு வாகன சாரதிகளும், பாதசாரிகளும் உரிய முறையில் வீதி ஒழுக்கவிதிகளைக் கடைப்பிடிக்காமையே இத்தகைய விபத்துக்களுக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்கள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்படுவோரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கும் இரத்துச் செய்வதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதய விபத்தக்களுக்கு கையடக்கத்தொலைபேசியின் அதிகரித்த பாவனை மற்றும் பாதசாரிகள் பாதசாரிகளுக்குரிய கடவைகளில் கடக்காமை போன்ற காரணங்களும் விபத்துக்கு வழிவகுக்கின்றன.

No comments:

Post a Comment