உயர்தரப் பரீட்சையில் ஏற்பட்ட குழறுபடிகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை கணனியில் பதிவு செய்த தரவுப் பதிவாளர்களினால் தவறிழைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தரவுகளை பதிவு செய்வதற்காக மூன்று தரவுப் பதிவாளர்கள் கடமையாற்றிய போதிலும், இம்முறை ஒருவரே கடமையில் ஈடுபட்டார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றது.
விசாரணைகளின் பெறுபேறு வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சைகளை கண்டறிய முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment