Wednesday, January 25, 2012

தபால் மா அதிபர் இராஜினாமா!- மறுக்கிறார் தபால் மா அதிபர் திஸாநாயக்க


தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,  தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க, தான் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக  வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார்.
தபால்மா அதிபர் பதவி விலகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து உதயன் ஒன்லைன் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை தான் பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும், ஆனால் தற்போது வகிக்கின்ற பொறுப்புக்கு மாறான வேறு ஒரு பொறுப்புக்கு மாற்றலாகிச் செல்ல  எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தபால்மா அதிபருக்கு எதிராகவும், தபால் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தபால் ஊழியர் சங்கம் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரகப் போராட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment