Sunday, August 16, 2015

Jaffna Hindu primary



hi...all who studied in jaffna hindu primary school, there is a meeting to form a committee of old boys and girls....all of you are invited sunday 23  at 4 o clock at jaffna hindu primary premises

 like link 
https://www.facebook.com/pages/Jaffna-Hindu-primary/422384674633162

Thursday, June 18, 2015

யாழ்ப்பாணத்தில் உதயமாகும் யாழ் வங்கி !

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர்.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களே இவ்வாறு வங்கி ஆரம்பிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மக்களுக்கு தேவையான வியாபார மற்றும் அபிவிருத்திக் கடன்களை வழங்குவது இந்த வங்கியின் பிரதான நோக்கமாகும்.
இலங்கையின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வணிக வங்கியொன்று ஆரம்பிக்க 500 மில்லியன் பங்கு மூலதனம் இருக்க வேண்டும்.
வங்கிக்கு மத்திய வங்கி அனுமதியளித்தால் எதிர்வரும் மாதங்களில் வங்கியை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வித்தியா கொலையில் திடீர்த் திருப்பங்கள் - கொலையாளிகளுக்கு வாதிட சிங்கள சட்டத்தரணிகள் ஆயத்தம்?

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை.
இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் வித்தியா கொலை வழக்கில் அழையாமல் நுழைந்துள்ள இவ் மூன்று சட்டத்தரணிகள் குறித்து என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? அல்லது வித்தியா கொலை வழக்கை சட்டத்தரணி தவராசா அவர்களிடமிருந்து பரித்தெடுத்து வழக்கு விசாரணையை குழப்பும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வல்லைப் பகுதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் ஒருவர் மரணம் -


வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித் தள்ளி வீதியின் அருகில் இருந்த பனை மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டர் சைக்லில் பயணித்தவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். இதேவேளை குறித்த மோட்டர் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி ஒருவர் மந்திகை வைத்தியசாலையிலும் மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

Saturday, September 27, 2014

"தமிழ் பேசு தமிழா ......."






இந்தப் பாட்டு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ எங்களுடைய தமிழா பாடல்.
Music-T.Matheesan
Singers-S.Kogulan & E.Seyon
Lyrics-Rajah Suthen
Recording,mixing & Mastering-G.Sathiyan- Sapthami Studio
தமிழா நீ தமிழ் பேசு....
soundcloud.com


By:- Tharshan

Saturday, August 16, 2014

Allianz senior branch manager Mahendrarajah

Allianz Life Insurance Lanka Ltd
Congratulations




நல்லூரான் வீதியில் மணல் சிற்பங்கள்



news
 நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 
 
நல்லூர் பெருந்திருவிழாவைக் காண்பதற்காக நாலா திக்குமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
 
தினமும் முருகப்பெருமான் மாலை வீதியுலாவரும் காட்சியை காண வரும் அடியவர்களில் சிறுவர்கள் இளைஞர்கள் என்ற பேதம் இன்றி ஆலய சூழலில் காணப்படும் மணல் பரப்பில் பக்திமயமான உருவங்களை உருவாக்கி தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கின்றன. 
 
 
தினமும் பற்பல கைவண்ண கோலங்கள் மணலில் உருவாகின்றன. இவற்றில் சில வருமாறு.



50 கோடிகளை தாண்டிய வேலையில்லா பட்டதாரி


ராஞ்சானாவுக்கு அடுத்து தனுஷின் கரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை வேலையில்லா பட்டதாரி தட்டிச் சென்றுள்ளது. இன்றைய தேதிவரை உலகம் முழுவதும் ஐம்பது கோடிகளை படம் வசூல் செய்துள்ளது.
வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25 வது படம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் தனுஷ்தான் படத்தின் ஸ்கிரிப்டையும், காட்சிகளையும் வடிவமைத்தார். அவரது வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிப்பு.
சிவ கார்த்திகேயனுக்கு உள்ள மார்க்கெட் தனுஷுக்கு இல்லை என பரவலாக பலரும் எழுதி வந்த நிலையில் தனது ஸ்டார் பவரை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலையில்லா பட்டாரி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் தனுஷுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தனது 25 வது படம் ஐம்பது கோடிகளை வசூலித்த பிறகும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது என மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் தனுஷ்.


கவனிப்பார் இல்லாத நிலையில் நல்லுார் மந்திரிமனை

நமது கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க வரலாற்றைக் கொண்ட யாழ் நல்லுார் மந்திரிமனை கவனிப்பார் இல்லாத நிலையில் காணப்படுகின்றது.
நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டிடம் இன்றும் பாடசாலை மாணவர்களினால் பார்வையிடப்பட்டு வருகின்றது.
இந்தக் கட்டிடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனை தனியார் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகின்ற நடவடிக்கையும் காணப்படுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடை பெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு அந்தக் குழுவும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு பதவிகளைபெற்று தனது கடமையை செய்யாது கைவிட்டு மாநகரசபையின காலமும் முடிவடையவுள்ளது.
ஆனாலும் கூட வட மாகதாண சபை இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் கூட காணப்படுகின்றது.
தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அரசு திட்டமிட்டு அழித்து வருவதாக சுறுவதிலும் பார்க்க இருக்கும் தமிழர்களின் அடையாளங்களையாவது பாதுகாக்க வட மாகாண சபை முன் வரவேண்டும் என பலரும் தெரிவிக்கின்றார்கள்.