Friday, January 13, 2012

பனடோல் கார்ட் ஒன்றை ஒரு ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 5000 ரூபா அபராதம்

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் பனடோல் கார்ட் ஒன்றை ஒரு ரூபா அதிக  விலைக்கு விற்பனை செய்தவருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் 5000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

ஒரு பனடோல் கார்ட்டின் விற்பனை விலை 27 ரூபா ஆகும். எனினும் அவர் 28 ரூபாவுக்கு விற்பனை செய்ததினால் பாவனை அதிகார சபையினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. குறித்த கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவருக்கு யாழ் நீதவான் எம். கணேசராசா 5000 ரூபா அபராதம் விதித்தார்.

No comments:

Post a Comment