Monday, January 30, 2012

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கைக்கு இராஜதந்திர பிரச்சினை: ஈரான் இலங்கைக்கு உதவுவதாக அறிவிப்பு

news
எரிபாருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை இராஜதந்திர பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தயாரகவே உள்ளதாக ஈரான் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

ஆறு மாத காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா நிதி வழங்கல் சட்டத்தைக் கொண்டு வரும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை தொடரந்தும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதாக இந்தியாவுக்கும் ஈரான் அறிவித்துள்ளது. எனினும் இந்தியா அமெரிக்காவின் தடையை கருத்தில் கொள்ளாது தெஹ்ரானுக்கு அதன் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவரும் நிதிவழங்கல் தடை இலங்கையை பாதிக்கும் விதம் குறித்து தெளிவற்ற நிலைப்பாட்டடை இலங்கை அரசு கொண்டுள்ளது.

இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க தூதரகத்துடன் இதுகுறித்து தெளிவைப் பெற முயன்றுள்ளார்.

எனினும், இந்தவிடயத்தை எதிர்வரும் 2 ஆம் திகதி அமெரிக்காவின் திறைசேரி உதவிச் செயலாளர் லுகி புரோனினுடன் மாத்திரமே கலந்துரையாட முடியும் அமெரிக்க தூதரக ஊடக பணிப்பாளர் கிறிஸ்டீல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் மீது விதிக்கும் நிதிவழங்கல் தடை காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அவரே கருத்துக் கூறக்கூடியவர் என்று டீல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஈரானிடமிருந்து 80 வீதமான மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதற்காக 4 மாத கடன் சலுகையையும் இலங்கை பெற்றுக்கொள்கிறது.   

No comments:

Post a Comment