Friday, January 13, 2012

முல்லைத்தீவு பாடசாலை காணி ஒன்றை படையினருக்கு தாரைவார்க்க பிரதேச செயலர் முயற்சி!



முல்லைத்தீவு கருநாட்டுக் கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக் காணி மற்றும் பிரதேச சபைக்குரிய காணிகளை இராணுவத்தினருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு அப்பகுதி பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு கூட்டமைப்பினர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் காணிகளை பெறுவது தொடர்பாக, முல்லைத்தீவு கருநாட்டுக் கேணி இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளருக்கிடையில் சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே குறித்த காணிகளை இராணுவத்தினருக்கு வழங்குமாறு காணி அமைச்சுக்கு விண்ணப்பிக்கப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. இருந்தும் தற்போது, பிரதேச செயலாளரினால் இராணுவத்தினருக்கு வழங்க நடவடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.
தற்போது இது தொடர்பான உண்மை நிலையினை அறிவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன் ஆகியயோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொது மக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment