Wednesday, January 4, 2012

மட்டு.களுவாஞ்சிகுடியில் குடும்பஸ்தர் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளிப் பகுதியில் தூக்கிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறுமண்வெளி, 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ரஞ்சன் (30வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே தற்கொலை செய்துள்ளார்.
சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை ஆதார வைத்தியசாலை அத்தியட்சர் கு.சுகுணன் மேற்கொண்டார்.
மரண விசாணையை மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம் மேற்கொண்டதுடன் கூடிய மதுபோதையில் தூக்கில் தொங்கியதால் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறலால் ஏற்பட்ட தற்கொலை மரணம் என தீர்ப்பளித்தார்.
பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment