மட்டக்களப்பு மீராவோடைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் ஜந்து பேர்களை வாகனமொன்றில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வீடொன்றில் வளர்த்து வந்த புறாக்களை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை, குறித்த வீட்டு உரிமையாளர் அடியாட்களின் உதவியுடன் பொலிஸாரின் அனுமதியின்றி கைது செய்து துன்புறுத்தி, உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாகவும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அறிந்து பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment