நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில் செங்கலடி எல்லை வீதியில் உள்ள தர்ஷிக்கா (17வயது) என்ற யுவதியே கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பெற்றோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர், செங்கலடி பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்தோர் யுவதியை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவர்கள் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த சம்பவம் காதல் பிரச்சினை காரணமாக குறித்த யுவதி காதலனுடன் சென்றுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment