Saturday, January 7, 2012

கழிவுநீருக்கு மத்தியில் குளப்பிட்டி மீன் சந்தை


-சுகிதா-சந்தைக் கட்டடத் தொகுதியினைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சிரமத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கொக்குவில், குளப்பிட்டி மீன் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
அதிகளவான வியாபரிகளையும், நுகர்வோரையும் ஈர்க்கும் இடமாகக் காணப்படும் இந்தக் கொக்குவில் குளப்பிட்டிச்  சந்தையின் கட்டடத் தொகுதியானது மரக்கறி மற்றும் மீன் வியாபார நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு்ள்ளன.
சந்தையின் மரக்கறி வியாபாரக் கட்டடத் தொகுதியினைத் தினமும் மாலை நேரங்களில் நல்லூர் பிரதேசசபையினர் சுத்தம் செய்வதனால், தாம் எந்தவித சிரமங்களுமின்றி சுத்தமான சூழலி்ல் வியாபாரம் செய்வதாக மரக்கறி வியாபாரிகள் கூறினர்.
இதேவேளை, இந்த சந்தையில் தாம் பெரும் கஷ்டத்தின் மத்தியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தாம் மீன் வியாபாரம் செய்யும் இந்தக் கட்டடத் தொகுதியானது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தமது இடத்தினை பிரதேச சபையினர் கழுவி சுத்தம் செய்கின்றபோதும் கழிவு நீர் வழிந்தோடுவதற்கான வசதிகள் காணப்படாமையினால்,  கட்டடத்தைச் சுற்றி கழிவு நீர் தேங்கி நின்று  துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறினர்.
சந்தையினை சுத்தம் செய்வதற்கான வரியை வியாபாரிகளிடமிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாது அறவிடும் நல்லூர்ப் பிரதேசசபை தங்களது இந்த நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்பதற்கான நடவடிக்கையினை இந்தப் பிரதேசசபை மேற்கொள்ளவேண்டும் என்றும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment