Monday, January 2, 2012

மர்மப் பொருள் வெடித்து சிறுவன் பலி!- அக்கரைப்பற்றில் சம்பவம்


பந்து என நினைத்து எறிந்து விளையாடிய மர்மப் பொருள் வெடித்ததில் சிறுவனொருவன் உயிரிழந்ததுடன் மற்றுமொரு சிறுவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச பதூர் நகர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரும்புப் பந்து என நினைத்து இருவரும் மாறி மாறி எறிந்து விளையாடிக் கொண்டிருந்த போதே இது வெடித்துள்ளது.
இவ் வெடிப்புச் சம்பவத்தில் பதூர் நகரைச் சேர்ந்த நிவாஸ் (12 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த இக்கினாஸ் (வயது 16) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment