கொழும்பில் மிகவும் ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிக்கும் முகமாக காணியொன்றுக்கு இந்தியாவின் ஐடிசி குழுமம், இலங்கை அரசாங்கத்துக்கு முற்பணத்தை செலுத்தியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் அமையவுள்ள இந்த ஹோட்டலுக்காக 50 வீத கொடுப்பனவான 73.5 மில்லியன் டொலர்களை இந்திய நிறுவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 300 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் இந்த ஹோட்டல் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக்காணியை சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி நிறுவனம் கொள்வனவு செய்தபோதும் காணி விற்பனை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டமையால், இலங்கை அரசாங்கம் முற்பணக் கொடுப்பனவை சீன நிறுவனத்துக்கு திருப்பியளித்தது.
இந்தக்காணி ஏற்கனவே ஹொங்கொங்கின் சங்க்ரி லா குழுமம் ஹோட்டல் அமைப்புக்காக காலி முகத்திடலில் கொள்வனவு செய்துள்ள காணியை ஒட்டிய வகையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment