Tuesday, January 3, 2012

இலங்கை பிரஜைகளின் இரகசிய தகவல் அடங்கிய கணணி புள்ளிவிபர வலையமைப்பு உருவாக்க திட்டம்: பாதுகாப்பு அமைச்சு


இலங்கையின் சகல பிரஜைகளினதும் இரகசிய தகவல்கள் அடங்கிய   கணணி புள்ளிவிபர வலையமைப்பு ஒன்றை உருவாக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக, நிதி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இவ்வாண்டிற்காக ஆயிரத்து 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 2013ஆம், 2014 ஆம் ஆண்டுகளுகளுக்காக 13 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதுடன், இந்த அடையாள அட்டை வெளியிடப்பட்ட பின்னர், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அடையாள அட்டைகள் பாவனையில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment