2012ம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய நாளில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தப்படும் பாடசாலைகள் தவிர்ந்த சகல அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகியுள்ளன.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 9 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் தமது எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்கள் தவறான செயற்பாடுகளுக்கு அடிமையாகாது தமது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அனைத்து மாணவர்களினதும் கல்வி செயற்பாடுகள் வெற்றியளிக்க வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment