இந்த நெடுங்சாலையில் கடந்த ஆண்டு 50 விபத்துக்களும் இவ் ஆண்டு 36 விபத்துக்களுமாக இதுவரை 86 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாகனம் செலுத்திய காரணத்திற்காக இதுவரை 9070 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றுள் இவ் ஆண்டு மட்டும் 999 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலை கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள்ளாகவே விபத்து ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment