Monday, January 2, 2012

ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழுத் தலைவரின் மனைவி, பிள்ளைகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்து வைப்பு


மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக் குழுத் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் எனப்படும் குமார மஹத்தயாவின் குடும்பத்தினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேம்குமார் குணரட்னம் அவர்களின் மனைவியான சம்பா சோமரட்ன மற்றும் அவருடைய இரு பிள்ளைகள் ஆகியோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவில் வசித்துவருவதாகவும், விடுமுறைக்கு இலங்கை வந்துவிட்டு மீண்டும்  வெளிநாடு செல்ல இன்று திங்கட்கிழமை அதிகாலை விமான நிலையத்திற்குச் சென்ற வேளையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, 47 வயதுடைய பெண்ணும் இரு பிள்ளைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த பெண்ணும் பிள்ளைகளும் பாங்கொக் நோக்கி பயணிக்கவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment