Saturday, January 14, 2012

யாழ்.அரச அதிபர் இமெல்டாவுக்கெதிராக செய்தி வெளியிடும் இணையத்தளங்களுக்கு விசாரணை



யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடும் இணைய ஊடகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கி வரும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் அரசாங்க அதிபருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக திவயின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாண நீதவான் இவ்வாறான  இணையத்தளங்கள் பற்றி விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் திவயின் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment