Friday, January 20, 2012

வங்கி ஊழியர் போல நடித்து வாடிக்கையாளரின் பணம் கொள்ளை! வாழைச்சேனையில் சம்பவம்


வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையில் நகை அடவு மீட்பதற்காக வந்த வயோதிப வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வங்கி உத்தியோகஸ்த்தர் போன்று நடித்த நபர் ஒருவர் அவரிடமிருந்த பணத்தினை பெற்று களவாடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நண்பகல் வேளை இடம்பெற்றுள்ளது. பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த மீராலெவ்வை ஆதம்பாவா என்வரே தனது இரண்டு இலட்சத்து பத்தாயிரத்து அறு நூறு ரூபா பணத்தினை (210600 ரூபா) இழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் களவு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வங்கியில் வீடியோ சாதன வசதி இல்லாத காரணத்தினால் கொள்ளையரை கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் வங்கியில் ஏற்கனவே கொள்ளையர்கள் இரவு வேளை ஜன்னல் பகுதியினை உடைத்து களவினை மேற்கொள்ள முயற்சி மேற்க்கொண்ட போது அது பயனற்று போனமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment