Monday, January 2, 2012

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக இலங்கையில் புதிய கொள்கைத் திட்டம்

news





சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய கொள்கைத் திட்டம் ஒன்று அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத் திட்டத்திற்கான  ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தியாகி விட்டதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு புதிய கொள்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் நடைமுறையிலிருக்கின்ற அனைத்து சட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை முன்வைக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment