யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நீண்டகாலமாக முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மின்கம்பம் தற்போது புதிய மின்கம்பமாக மாறியுள்ளது.
முறிந்து விழும் நிலையில் இருந்த கம்பத்தினூடே மின்சார விநியோகம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்ததோடு பயணிகள் மத்தியில் அச்சத்ததையும் தோற்றுவித்திருந்தது.
யாழ். பருத்தித்துறை வீதியில் இருபாலைச் சந்திக்கு அருகில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தை அண்மையில் உடைந்து அபாயம் விளைவிக்கும் நிலையில் மின்கம்பம் ஒன்று காணப்படுவதாக உதயன்ஒன்லைன் கடந்த 8ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து உடைந்துவிழும் நிலையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மின்கம்பத்தை அகற்றி இலங்கை மின்சார சபை புதிய கம்பமொன்றை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment