
நேற்று நண்பகல் 12 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினால் 47 வயதுடைய ஹேவாகுருகே ஆரியவதி என்ற பெண்மணியே பலியாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகறாரே இக்கொலைக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடும் சூரியவெவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment