Monday, January 2, 2012

கலகத்தில் ஈடுபட்ட கணவனை பொல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது: பதுளையில் சம்பவம்


மது போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் கலகத்தில் ஈடுபட்ட கணவனை, மனைவி பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பதுளை, மெதபத்தான பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியுடன் கலகத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் தாக்கியுள்ளார். அதிக போதையில் இருந்தமையால் குறித்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment