நேற்று பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலாளரை தாக்கியதாக கடற்படை அதிகாரி உட்பட இருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்களில் வந்த மூன்று கடற்படை புலனாய்வாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரியுடன் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு வந்து நின்ற கறுப்பு காரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை உயரதிகாரியை, கடற்படை புலனாய்வு பிரிவினர் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இடம்டபெற்ற வேளையில் காங்கேசந்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பார்த்துக் கொண்ட நின்ற போதிலும் அதனைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment