Saturday, May 19, 2012

யாழ்பாண மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்..




ஏற்கனவே மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த இடங்களுக்கு மேலதிகமாக 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் வீதி அகலிப்பு பணிகளுக்காக கைதடி மானிப்பாய் வீதியில் உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த.

 மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், தட்டார்தெரு ஆகிய இடங்களிலும்  வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால்.

 21.05.2012 திங்கட்கிழமை, 23.05.2012  புதன்கிழமை,
25.05.2012 வெள்ளிக்கிழமை மற்றும் 27.05.2012 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கோண்டாவில் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில் பிரதேசத்தின் ஒரு பகுதி, நாச்சிமார் கோவிலடி, புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான் ஆகிய இடங்களிலும்.

22.05.2012 செவ்வாய்க்;கிழமை, 24.05.2012  வியாழக்கிழமை மற்றும் 24.05.2012 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்.

21.05.2012 திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும்  இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி வைத்தியசாலையில் மரணம்




பாடசாலையில் விழுந்த மாணவி ஒருவர் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தச்சம்வம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

அக்கரப்பத்தனை டொரிங்டன் தமிழ் பாடசாலையில் தரம் மூன்றில் கல்விக்கற்று வந்த அயோனா தோட்டத்தைச் சேர்ந்த எட்டு வயதான சிவக்குமார் சியாளனி என்ற மாணவி கடந்த 15ஆம் திகதி வழமைப்போல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென கீழே விழுந்ததாகவும் அதன் பின்பு இந்த மாணவியைப் பாடசாலையின் நிருவாகத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவி 16ஆம் திகதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப்பின்பு குறித்த சிறுமியின் சடலம் நேற்று 17ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக அக்கரப்பத்தனைப் பொலிஸார் பல்வேறு தரப்பிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

படைவீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி - வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி


இராணுவப் படைவீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கண்டி களுகம்மான என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்குள் புகுந்த படைவீரர், தாய், தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய படைவீரருடன் உயிரிழந்த யுவதியின் சகோதரர் மோதிக் கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட காயங்களுக்காக படைவீரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி
பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று பொலிஸ் உத்தியோகஸ்;தர்கள் உயிரிழந்துள்ளனர். பன்னல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ட்ரக் வாகனத்தில் மோதியதையடுத்தே இவ்விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.

யாழ் மே தினக் கூட்டத்தில் பங்குபெறாத ஐ.தே.கவின் உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை பூர்த்தி


ஒன்றிணைந்த எதிர்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் பொறுப்புகளை பூர்த்தி செய்யாத உறுப்பினர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால், பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மே தினத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, திலீப வெத ஆராய்ச்சி, ரோஷி சேனாநாயக்க, சுஜீவ சேனசிங்க ஆகியோர் அனுமதி பெற்றிருந்தனர்.
எனினும், மேதினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தித்திராத கரு ஜயசூரிய, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண, அசோக அபேசிங்க மற்றும் தலத்தா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் அறிக்கையின் படி விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண மேதின நிகழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் சாதகத்தன்மை தொடர்பாக குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.