Saturday, May 19, 2012

படைவீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி - வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி


இராணுவப் படைவீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கண்டி களுகம்மான என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்குள் புகுந்த படைவீரர், தாய், தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய படைவீரருடன் உயிரிழந்த யுவதியின் சகோதரர் மோதிக் கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட காயங்களுக்காக படைவீரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி
பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று பொலிஸ் உத்தியோகஸ்;தர்கள் உயிரிழந்துள்ளனர். பன்னல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ட்ரக் வாகனத்தில் மோதியதையடுத்தே இவ்விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment