Saturday, May 19, 2012

யாழ் மே தினக் கூட்டத்தில் பங்குபெறாத ஐ.தே.கவின் உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை பூர்த்தி


ஒன்றிணைந்த எதிர்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் பொறுப்புகளை பூர்த்தி செய்யாத உறுப்பினர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால், பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மே தினத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, திலீப வெத ஆராய்ச்சி, ரோஷி சேனாநாயக்க, சுஜீவ சேனசிங்க ஆகியோர் அனுமதி பெற்றிருந்தனர்.
எனினும், மேதினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தித்திராத கரு ஜயசூரிய, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண, அசோக அபேசிங்க மற்றும் தலத்தா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் அறிக்கையின் படி விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண மேதின நிகழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் சாதகத்தன்மை தொடர்பாக குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment