Friday, December 16, 2011

படகு விபத்து! ஒருவர் காணாமல் போயுள்ளதோடு இருவர் வைத்தியசாலையில்: மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு முகத்துவார பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதோடு மேலும் இருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று வியாழக்கிழமை(15.12.2011) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துறைசாமி புவனேந்திரன் என்பவரே காணாமல் போனவராவார்.
அவருடன் சென்று நீரிழ் மூழ்கி விபத்துக்குள்ளான இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல்போன நபரை கண்டு பிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment