Thursday, December 29, 2011

கிளிநொச்சியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பா.உ சிறிதரனின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்


கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பரவலாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, புலோப்பளை கிழக்கு, உருத்திரபுரம் வடக்கு, சக்திபுரம், பரந்தன், கமறிக்குடா உதயநகர் கிழக்கு மற்றும் விவேகானந்த நகர், கனாகாம்பிகைக் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பிரதேச கட்சி அமைப்பாளர் சுரேன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நா.வை. குகராசா, கரைச்சி பிரதேசசபை உப தவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் ஆகியோரின் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகத்தில் இருந்து பா.உறுப்பினரின் ;செயலாளர் பொன்.காந்தன், அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் ஜோன் வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

No comments:

Post a Comment