Thursday, December 29, 2011

யாழில் கடல் கொந்தளிப்பு! மீனவர்கள் தொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர்



யாழ்.குடாக்கடலில் கொந்தளிப்பு நிலை தொடர்வதால் மீனவர்கள் இன்று இரவு மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்.குடாக்கடல், முல்லைத்தீவுப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் தெரவித்துள்ளதுடன், மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment