Tuesday, December 20, 2011

யூரோ நாணயத் தாள்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது


யூரோ நாணயத் தாள்களை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 51 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோ நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment