ஆயித்தியமலை - திக்கந்த பிரதேசத்தில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை ஆயித்தியமலைப் பொலிஸார் இன்று ஞயிற்றுக்கிழமை (11.12.2011) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 66 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவரால் செய்கை பண்ணப்பட்ட ஒன்றரை ஏக்கர் கஞ்சா செய்கையை ஆயித்தியமலை சாஸ்த்ரவெலி முகாம் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment