Friday, December 23, 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரையில் 32 விபத்து! 300 பேருக்கு வழக்கு


தெற்கு அதிவேக நெடுஞசாலை திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 32 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 300 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிவேகம் மற்றும் கவனமின்றி வாகனம் செலுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடபுறமாகவே வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும், மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்லும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே வலப் பக்கத்தில் வாகனத்தை செலுத்த வேண்டுமெனவும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பண்டிகை காலத்தில் மதுபோதையில் மற்றும் அதிவேகத்தில் இந்நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றினூடாக நாளொன்றுக்கு ஆறாயிரம் வாகனங்கள் பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment