
வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்றுவரும் மாணவ மாணவிகளுக்கு உதவும் நோக்கத்தோடு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு ஜேர்மனி போன்ற நாடுகளில் வாழும் பல தமிழ் பேசும் அன்பர்கள் தங்கள் நிதி அன்பளிப்புக்களை ஏற்கெனவே வழங்கியுள்ளார்கள்.




கனடாவில் மேற்படி திட்டத்திற்கான நிதி அன்பளிப்புக்களை தமிழ் பேசும் அன்பர்களிடம் பெற்றுக்கொள்வதில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் கல்வித்துறை பொறுப்பாளர் திரு வி. எஸ். துரைராஜா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சியியானல் பல அன்பர்கள் தங்கள் அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
மேற்படி நிதியத்திற்கு அண்மையில் தங்கள் நிதி அன்பளிப்புக்களை வழங்கிய நிதி ஆலோசகர் திரு ரொம் திருக்குமார் தமிழன் வழிகாட்டி வெளியீட்டாளர் திரு. செ. செந்திலாதன் மற்றும் திரு காப்புறுதி முகவர் திரு சிவா. கணபதிப்பிள்ளை ஆகியோர் நிதி வழங்குவதை படங்களில் காணலாம்.

No comments:
Post a Comment