Thursday, December 29, 2011

பகவத் கீதையை தடை செய்யக் கோரிய மனு நீதிமன்றால் நிராகரிப்பு


ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ரஷ்ய சட்டத்திற்கு முரணான விதத்தில் பகவத் கீதை அமைந்திருப்பதாக தெரிவித்து, பகவத் கீதையைத் தடை செய்யுமாறு சைபீரியன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஷ்ய அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியதுடன், தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், சர்வதெச ரீதியிலும் இது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பகவத் கீதையை தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் இன்று தடை செய்துள்ளது.

No comments:

Post a Comment