
இன்று செவ்வாய்கிழமை அதிகாலை கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த 12 இளைஞர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பயணம் செய்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment