Friday, December 23, 2011

கடும் குளிரால் மீனவர் மரணம்: யாழ். குருநகரில் சம்பவம்


யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையில் கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவரொருவர் கடும் குளிர் காரணமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை குருநகர் இறங்குதுறை கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கடும் குளிர் காரணமாக வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக இவருடன் சென்ற ஏனைய இரு மீனவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான அருளப்பு மரியநாயகம் (வயது 73) என்ற மீனவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
 குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் தற்போது மீனவரின் மரணம் தொடர்பான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment