Monday, December 19, 2011

பஸ் விபத்து! 22பயணிகள் படுகாயம்: பதுளையில் சம்பவம்


பதுளை மாவட்டத்தில் அக்கரப்பத்தனை, மன்ராசி கடை வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை( காலை 11 மணியளவில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து போர்டைஸ் வழியாக டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் விபத்தினால் 22 பேர் காயமடைந்த நிலையில் மன்ராசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment