Thursday, December 29, 2011

அரசினால் அப்பாவி மாணவர்களின் பெறுபேறுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன : சரத் பொன்சேகா


அப்பாவி மாணவ, மாணவியரின் பெறுபேறுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். 
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளை இந்த அரசாங்கம் திரிபுப்படுத்தி வெளியிட்டுள்ளது.
இதுதான் அரசாங்கம் மக்களுக்கு செய்யும் நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை சரியான முறையில் வெளியிட முடியாத நிலையில் அரசாங்கம் அபிவிருத்தி குறித்து பேசுவது பைத்தியக்காரத்தனமானது.
பள்ளக்கில் பவணி வருவது போன்று இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், அதன் பயணம் என்னவோ நடை பயணம் தான் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment