Thursday, December 29, 2011

கொழும்பு மோதரைப் பகுதியைச் சேர்ந்தவர் களனி ஆற்றில் சடலமாக மீட்பு

கொழும்பு மோதரைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவரின் சடலமொன்று, களனி ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - 15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது-36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், இச்சம்வம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment