
ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட இந்திக்க, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மினுவங்கொட கொட்டாதெனிய மாவுஸ்ஸா என்னும் இடத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட இந்திக்க சந்திரசிறிக்கு எதிராக, பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திக்க ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே, முன் விரோதம் காரணமாக இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment