மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில், சுனாமி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களுக்கு இந்து குருமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகள் அனைத்தும் இறைபதம் அடைந்துள்ளன என்ற எண்ணங்களை மனதில் கொண்டு செயற்பட முன்வரவேண்டும். இவ் இயற்கை அனர்த்த அழிவின் நிலையை நினைவில் இருந்து ஓரளவு நீக்கிச் செல்லல் சாலச் சிறந்ததாகும்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பிதிர் கிரியைகள் நடாத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுயிர்கள் சிலவேளை வேறு இடங்களில் புதிய ஒரு பிறப்புக்கு நுழைந்திருக்கலாம் அல்லது இறைவன் திருப்பதத்தை அடைந்திருக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் இவ்வாறான துன்ப சூழல் உருவாகாமல் இருக்க நாம் இறைவனை பிராத்திப்போம் என்று கூறினார்.

No comments:
Post a Comment