
கொழும்பு மாநகர பொது சுகாதார உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கண்டறியப்பட்டதாக மாநகர சபையின் பிரதம பொது சுகாதார அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புடவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை வர்ணம், உணவுகளில் சேர்க்கப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர பிரதம பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விற்பனையாளர்களுக்கு இன்று முதல் விசேட சீருடை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பயிற்சியை உரிய முறையில் நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதீப் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment