Friday, December 23, 2011

அமைச்சுப் பதவியைப் பெற்று உங்களுக்கு பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்? - பஸிலுக்கு சம்பந்தன் சாட்டை


தீர்வுப்பேச்சு உட்பட்ட பல விடயங்களில் அரசுடன் ஒத்துழைத்தே செயற்பட்டு வருகிறோம். இப்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையைக் கொண்டது? பைல்களைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று உங்கள் பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்? இவ்வாறு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அமைச்சர் பஸில் ராஜபக்ச விடுத்திருக்கும் வேண்டுகோள் குறித்துக் கேட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தீர்வுப் பேச்சின் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பிலான எமது நிலைப்பாட்டை எடுத்துச்சொல்லிவிட்டோம்.
பேச்சுகளின்போது பொறுமையாக இருந்து அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்துத் தானே வருகிறோம்.
அவர்கள் கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையிலானது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.
பைல்களைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று அவர்களின் பின்னால் நிற்பதையா இவர்கள் எதிர்பார்க்கின்றனர்? என்று கேட்டார் சம்பந்தன் எம்.பி.

No comments:

Post a Comment