Wednesday, December 14, 2011

த.தே.கூட்டமைப்பு இன்று மீண்டும் அரசதரப்பை சந்திக்கிறது


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை நடபெறவுள்ளது.
இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே மாகாண இணைப்பு, காணி மற்றும்  பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட விடயங்களை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளின் போது அதன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கவில்லை.
எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த மூன்று விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் அரசாங்கத்துடன் பேசப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment